இணையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள்(வீடியோ)
தமிழ்ப் படைப்புகளை மின்மயப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது சிங்கப்பூர்.
தமிழ்ப் படைப்புகளை மின்மயப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது சிங்கப்பூர்.
அந்தப் பணி சீரும், சிறப்புமாய்த் தொடர வேண்டும் என்று விரும்புவதாக மூத்த பத்திரிகையாளர் திரு மாலன் கூறியுள்ளார்.
"இணையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள்" எனும் தலைப்பில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாடு அது.
உலகில் தமிழை நிலைத்திருக்கச் செய்வதில் சிங்கப்பூருக்கு என்றும் தனியிடம் உண்டு.
மொழியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று அதற்கு அழியா இடத்தைக் கொடுப்பதில் இணையம் முக்கியப் பங்காற்றுகிறது. நிகழ்ச்சியின் வழி அதை நன்றாக உணர முடிந்தது.