"திரைவழி கவிமணம்" நிகழ்ச்சி(வீடியோ)
திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்ட சூழலுக்கு ஏற்ப பொருத்தமான புதிய வரிகளை எழுத வேண்டும். இதுவொரு புதுமையான சவால்.
திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்ட சூழலுக்கு ஏற்ப பொருத்தமான புதிய வரிகளை எழுத வேண்டும். இதுவொரு புதுமையான சவால்.
தயக்கமின்றித் துணிச்சலுடன் அந்தச் சவாலை எதிர்கொண்டனர் சிங்கப்பூர் இளையர்கள்.
பேலஸ்டியர் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கம். தமிழ் மொழி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது "திரைவழி கவிமணம்" என்ற நிகழ்ச்சி.
அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது கவிதை மணம்.
இசைக்கும் பஞ்சமில்லை. ரசிகர்களுக்கும் குறைவில்லை.
வித்தியாசமான இந்தக் கவிதை ரசனைக்கு ஏற்பாடு செய்திருந்தது சிங்கப்பூர் இந்தியர் சங்கம்.
பல்வேறு கவிதைகளை ரசிக்கவும், சுவைக்கவும் வாய்ப்பளித்தது நிகழ்ச்சி. ரசிகர்களின் மனங்களில் நீடித்து நிலைத்திருக்கும், இந்தக் கவிதை மணம்.