Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரேமலதாவின் 'ரஜினி' வசனத்திற்கு ரசிகர்கள் கண்டனம்

பிரேமலதா விஜயகாந்தின் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

திருச்சி: பிரேமலதா விஜயகாந்தின் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

திருச்சியில்  நேற்று முன்தினம் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மகளில் அணி தலைவர் பிரேமலதா, 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது  'மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது ', என்று ரஜினி சொன்னார். அதையேதான் இப்போது நான் சொல்கிறேன் என்று பேசினார்.

பிரேமலதாவின இந்த பேச்சுக்கு திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1996-ம் ஆண்டு தேர்தலில் அப்போது இருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்தை, பிரேமலதா தற்போது கூறுவது,  தே.மு.தி.க - மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்களை திருப்புவது போல உள்ளது எடனற ரஜினி ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசியலில் அனைத்து தலைவர்களிடமும் ரஜினிகாந்த் நல்ல சுமுகமான நட்புறவை கொண்டுள்ளார். அவர்களது ரசிகர்களும் அதுபோன்று அவரது வழியில் சென்று கொண்டுள்ளனர்.

இந்த நேரத்தில் பிரேமலதா இப்படி பேசியிருப்பது அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஜினி ரசிகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்