Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

முதல்வராகும் தகுதி கேப்டனுக்கு இல்லை

: முதல்வர் ஆகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை என பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

நெல்லை: முதல்வர் ஆகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை என பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஓருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான உதயகுமார், தமிழக சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பச்சை தமிழகம் கட்சி சார்பாக தாம் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
யாரிடமும் கையூட்டு வாங்க மாட்டேன். எம்எல்ஏ பதவி முடியும் வரை ஓவ்வொரு நிதியாண்டிலும் எனது சொந்து கணக்கையும், வருமான கணக்கையும் தெரிவிப்பேன் என தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் தேர்தலில் யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. தங்களுக்கு யாரும் ஆதரவு தரவில்லை. ஒரு சில சிறிய அமைப்புகள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்கள் நல கூட்டணியுடன் பச்சை தமிழகம் கை கோர்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அந்த கூட்டணியில் உள்ள விஜயகாந்துக்கு முதல்வராகும் தகுதி இல்லை. விஜயகாந்த் இல்லாமல் மக்கள் நல கூட்டணி தங்களை ஆதரித்தால் ஏற்று கொள்வோம் என்றார் உதயகுமார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்