நான்தான் கிங் என்கிறார் கேப்டன்
நீங்கள் கிங்காக இருங்கள்; நாங்கள் கிங் மேக்கராக இருக்கிறோம் என்றார்கள். உடனே கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டேன், என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
நீங்கள் கிங்காக இருங்கள்; நாங்கள் கிங் மேக்கராக இருக்கிறோம் என்றார்கள். உடனே கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டேன், என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார். மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தொகுதி உடன்பாடு கையெழுத்தான பின்னர் கூட்டணி தலைவர்களுடன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தார் விஜயகாந்த்.
மக்கள் நலக்கூட்டணியினர் நால்வரும் வந்து, "நீங்கள் கிங்காக இருங்கள்; நாங்கள் கிங் மேக்கராக இருக்கிறோம்" என்றார்கள். உடனே கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டேன்.அண்ணன் வைகோ, "கூட்டணி ஆட்சி என்று கூறலாமா?" என்று கேட்டார். ''தாராளமாக அறிவித்துவிடுங்கள்'' என்று கூறிவிட்டதாக சொன்னார் விஜயகாந்த்..
பணத்தாசை கொண்டவன் என்றார்கள்; பேரத்துக்கு பணிந்துவிட்டேன் என்றார்கள். பத்திரிகை நண்பர்களே உங்களைத்தான் சொல்கிறேன்.
அந்தப் பக்கம் போய்விட்டேன் என்றீர்கள். இந்தப்பக்கம் சாய்ந்துவிட்டேன் என்றீர்கள். ஆனால் நான் அன்று அறிவித்தபடி, மக்களுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறேன்.
தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்று கூறியதுபோல இன்று மக்கள்நலக் கூட்டணியுடன் தான் கூட்டணி என்று விஜயகாந்த் செய்தியாளர்களைப் பார்த்து சொன்னார்.