Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

விஜயகாந்தின் தவறான முடிவு: பாஜக

மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து விஜயகாந்த் தவறான முடிவை எடுத்துவிட்டார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
விஜயகாந்தின் தவறான முடிவு: பாஜக

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். ( படம்: The Hindu)

சென்னை: மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து விஜயகாந்த் தவறான முடிவை எடுத்துவிட்டார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தம்மைப் பொறுத்தமட்டில் விஜயகாந்த் பாஜகவோடு வந்திருந்தால் அவர் என்ன நோக்கத்திற்காக இரண்டு கழகங்களையும் எதிர்த்துவந்தாரோ அது நிறைவேறி இருக்கும். ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் அவர் இணைந்திருப்பதால் எந்தொரு பலனும், பலமும் கிடைக்கப் போவதில்லை.

தமிழக அரசியலில் பலவீனப்பட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பாஜகவோடு இணைந்திருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்றார் தமிழிசை.
மக்கள் நலக் கூட்டணிக்கு எந்த பின்புலமும் கிடையாது. மக்கள் பின்பற்றக் கூடிய எந்த ஒரு தலைவரும் அதில் கிடையாது. விஜயகாந்த் தவறான முடிவை எடுத்து பலவீனப்பட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறினார் தமிழிசை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்