பிரசாரக் களத்தில் பாயத் தயார்
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், பிரசாரப் பயணத்திற்குத் தயாராகி வருகிறார். தமது மனைவி பிரேமலதாவுடன் 11 நகரங்களில் பிரசாரம் செய்ய அவர் திட்டமிடுகிறார்.
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், பிரசாரப் பயணத்திற்குத் தயாராகி வருகிறார். தமது மனைவி பிரேமலதாவுடன் 11 நகரங்களில் பிரசாரம் செய்ய அவர் திட்டமிடுகிறார்.
பிரேமலதாவின் பிரசாரம் முதலில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியாக 234 தொகுதிகளில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
விஜயகாந்த்தின் மைத்துனர் சதீஷும் இந்த முறை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாராம்.
பிரசாரப் பயணத்தில் தமது பலத்தையும், வாக்கு வங்கியையும் நிரூபிக்க முடிந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி பற்றிப் பேச அது பெரிதும் துணைபுரியும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தேமுதிக தவிர மேலும் 4 கட்சிகள் தற்போது கூட்டணியாக இணைந்திருப்பதால் கடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை விஜயகாந்த், பிரேமலதா கூட்டங்களுக்கு அதிகமானோர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.