டிவி பேட்டியில் கடுப்பாகி பாதியிலேயே சென்ற வைகோ(வீடியோ)
மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடுப்பாகி பேட்டியிலிருந்து பாதியிலேயே நடையைக் கட்டினார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடுப்பாகி பேட்டியிலிருந்து பாதியிலேயே நடையைக் கட்டினார்.
அவர், மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி செல்லும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தேமுதிகவுக்கு திமுக ரூ500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என வைகோ கூறியிருந்தார். இது தேர்தல் களத்தை படுசூடாக்கியிருக்கிறது.
அதற்காக வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அதைப் பற்றி வைகோவிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.