கேப்டன் ஆட்சிக்கு வந்தால் வைகோ துணை முதல்வர்
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள் என தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதிஷ் கூறியுள்ளார்.
சென்னை: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள் என தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதிஷ் கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் நடைபெறற தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய சுதிஷ், தமிழகத்தின் முதலமைச்சராக மே 23ம் தேதி கேப்டன் பதிவியேற்கின்ற நாளன்று துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு உள்ளாட்சி மற்றும் நிதியமைச்சர் பொறுப்பு அளிக்கப்படும்.
நீங்கள் கேப்டனை முதலமைச்சர் என்று சொல்லும்போது நான் இதையும் சொல்லியே ஆகவேண்டும் என்று விஜயகாந்தின் மச்சானான சுதீஷ் குறிப்பிட்டார்.ஆனால் புதிய அமைச்சரவையில் தமக்கு என்ன பதவி என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
எல்லாம் சேர்ந்து ... நல்லா காமெடி பண்றாங்கையா!