Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போயஸ் கார்டனிலேயே ஜெயாவுக்கு ஆப்ரேஷன்

பத்து நாட்களுக்கு முன் போயஸ்கார்டன் வீட்டிலேயே ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணி ஜெயலலிதாவுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்கு. என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

தஞ்சாவூர்; பத்து நாட்களுக்கு முன் போயஸ்கார்டன் வீட்டிலேயே ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணி ஜெயலலிதாவுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்கு. வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்காங்க. பத்திரிகைகாரர்கள் இதை எழுத தைரியமிருக்கா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கேட்டிருக்கிறார்.

அதிமுக நேர்காணலுக்கு போறவங்க சுவத்த பார்த்து பேசுகிறார்களா இல்லை ஜெயலலிதாவை பார்த்து பேசுகிறார்களா என யாருக்கு தெரியும். ஒரு படமாவது வெளியில் வந்திருக்கா என்று அவர் கேட்டார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொது கூட்டத்தில் பிரேமலதா பேசினார். அவரை வரவேற்று  "வாழும் அன்னை தெரசாவே" என அவரை கட்சியினர் புகழ்ந்து கோஷமிட்டனர் .

கூட்டத்தில் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசிய பிரேமலதா, "குண்டடிபட்ட பிறகு எம்ஜிஆர் வந்து பொது கூட்டத்தில் பேசினாரே, யாருக்காவது புரிஞ்சதா. பேசவே தெரியாத, பேசுறதும் புரியாத எம்ஜிஆரும், ஒன்னுமே படிக்காத காமராஜரும் தான் ஆட்சியில் அமர்ந்து மக்கள் மனதில் நின்றவர்கள். அதே போல் நமது கருப்பு எம்ஜிஆரும் ஆட்சியில் அமர்ந்து ஒட்டு மொத்த மக்கள் மனதையும் வெல்வார் ", என்று கூறினார். 

மீண்டும் அதிமுக, திமுக ஆட்சிக்கு வந்தால் மன்னார்குடி மாபியா கும்பல் கிட்ட இருந்தும், திருவாரூர் தீய சக்திகள்கிட்ட இருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று குறிப்பிட்டார் பிரேமலதா. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்