உலகக் கிண்ணக் காற்பந்து: தகுதிபெற தவறிய இத்தாலி
இத்தாலி 1958-ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற தவறியுள்ளது. இன்று காலை மிலானில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்வுப் போட்டியில் அது சுவீடனுடன் கோலின்றி சமநிலை கண்டது.
இத்தாலி 1958-ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற தவறியுள்ளது. இன்று காலை மிலானில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்வுப் போட்டியில் அது சுவீடனுடன் கோலின்றி சமநிலை கண்டது.
முதல் சுற்றில் அது 0-1 எனும் கோல் கணக்கில் சுவீடனிடம் தோல்வி கண்டது. எனவே ஒன்றுக்குப் பூஜ்யம் எனும் மொத்த கோல் எண்ணிக்கை வித்தியாசத்தில் அது தகுதிபெறத் தவறியது.
இன்றையப் போட்டி முழுவதும் இத்தாலி ஆதிக்கம் செலுத்திய போதும் அது கோல்போடத் தவறியது.
கடுமையாகப் போராடிய இத்தாலி பல வாய்ப்புகளை நழுவவிட்டது. நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இத்தாலி, இந்த முறை உலகக் கிண்ணக் காற்பந்துப்போட்டிக்குத் தகுதிபெறத் தவறியது காற்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.