Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ரொனால்டோ, காற்பந்துக் குழுவைவிட்டு வெளியேற விருப்பம்

வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ரொனால்டோ, காற்பந்துக் குழுவைவிட்டு வெளியேற விருப்பம்

வாசிப்புநேரம் -

லிஸ்பர்ன்: ரியல் மட்ரிட் காற்பந்துக்குழுவின் நட்சத்திர விளையாட்டளர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, அந்தக் குழுவைவிட்டும் ஸ்பெயினைவிட்டும் வெளியேற விரும்புவதாகக் கூறப்படுகிறது.

போர்ச்சுகல் ஊடகங்கள் அதனைத் தெரிவித்தன.

வரி ஏய்ப்புக் குறித்த குற்றச்சாட்டால் உருவான விரக்தியால், அந்த முடிவைத் திரு ரொனால்டோ எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

14.7 மில்லியன் யூரோ வரிப்பணத்தை அவர் கட்டத் தவறியதாகக் கூறும் ஸ்பானிய அரசுதரப்பு வழக்குரைஞர்கள் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆயினும், திரு ரொனால்டோ தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறிவருகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்