F1 இரவு நேரக் கார்ப் பந்தயம் - கடந்து வந்த பாதையின் சிறப்புத் தருணங்கள் சில
முதல் முறை 2008ஆம் ஆண்டு இரவு நேரக் கார்ப் பந்தயம் தொடங்கியபோது பலரும் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். பல்லாயிரம் பேர் நிகழ்ச்சியைக் காண பல நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்திருந்தனர்.
சிங்கப்பூரில் பத்தாவது முறையாக இரவு நேரக் கார்ப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டாகப் பலரின் ஆவலைத் துண்டியுள்ள போட்டியின் சில முக்கியத் தருணங்களைப் பிரதிபலிக்கும் அழகிய படங்கள் இதோ..
முதல் முறை 2008ஆம் ஆண்டு இரவு நேரக் கார்ப் பந்தயம் தொடங்கியபோது பலரும் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர்.
பல்லாயிரம் பேர் நிகழ்ச்சியைக் காண பல நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்திருந்தனர்.
2015-இல் பந்தயத்தடத்தில் தடம் பதிக்க எண்ணிய ஆடவர் ஒருவர் விளையாட்டாளர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தினார்.
அந்த நபர் குறித்து அதிகாரிகளுக்கு முதலில் தகவல் கொடுத்தது விளையாட்டாளர் சபேஸ்தியன் வெட்டல்.
2016ஆம் ஆண்டு கார்ப்பந்தயத் தடத்தில் உடும்பு ஒன்று உலா சென்றது.