உலகின் சிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதை மீண்டும் வென்ற ரொனால்டோ
பொர்ச்சுகல் விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் ஆகச் சிறந்த காற்பந்து ஆண் விளையாட்டாளர் விருதை வென்றுள்ளார்.
பொர்ச்சுகல் விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் ஆகச் சிறந்த காற்பந்து ஆண் விளையாட்டாளர் விருதை வென்றுள்ளார்.
அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத்தின் விருது நிகழ்ச்சியில் அவர் கௌரவிக்கப்பட்டார்.
கருத்துக் கணிப்புகளில் லியோனல் மஸ்ஸி (Lionel Messi), நெய்மார் (Neymar) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மகுடம் சூடினார்.
மகளிர் பிரிவில், நெதர்லந்தின் லீக்கே மார்டன்ஸ் (Lieke Martens) இந்த ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டாளராகக் கௌரவிக்கப்பட்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்றிரவு லண்டனில் நடைபெற்றது.