தென்கிழக்காசியப் போட்டிகள்: நச்சுணவு சம்பவத்தால் 16 மலேசிய விளையாட்டாளர்கள் பாதிப்பு
2017 தென்கிழக்காசியப் போட்டிகளில் நிகழ்ந்த நச்சுணவு சம்பவங்களால் 16 மலேசிய விளையாட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
2017 தென்கிழக்காசியப் போட்டிகளில் நிகழ்ந்த நச்சுணவு சம்பவங்களால் 16 மலேசிய விளையாட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கும் 16 மலேசிய விளையாட்டாளர்கள் வயிற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீச்சல் வீரரான டேனியல் பேகோ, அவரின் போட்டியைத் தவறவிட நேரிட்டது.
அந்தச் சம்பவம் குறித்து சுகாதார அமைச்சும் பல்வேறு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.