தென்கிழக்காசியப் போட்டிகள் - பனிச்சறுக்கில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்
17 வயது யூ ஷுரான் (Yu Shuran) 135.52 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறை இடம்பெற்றுள்ள, பனிச்சறுக்கில் சிங்கப்பூர் முதல் தங்கத்தை வென்றுள்ளது.
17 வயது யூ ஷுரான் (Yu Shuran) 135.52 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.
சிங்கப்பூரர் கிளோய் இங் (Chloe Ing) 128.61 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இந்த ஆண்டு பனிச்சறுக்கு, பனி ஹோக்கி போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கோலாலம்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒலிம்பிக் பனி விளையாட்டரங்கில் அந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.