Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்தில் புதிய மாற்றங்கள்

அடுத்த பருவத்தில் இருந்து, லீக்கில் இடம்பெற்றுள்ள 6 உள்ளூர் குழுக்களில் ஒவ்வொன்றிலும், குறைந்தது 6 ஆட்டக்காரர்கள், 23 வயதுக்குக் குறைவானவர்களாக இருக்கவேண்டும்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்தில் புதிய மாற்றங்கள்

(படம்: Today)

சிங்கப்பூரின் காற்பந்து தரம் குறைந்துவருவதைத் தடுக்க, சிங்கப்பூர் காற்பந்து சங்கம், S.Leagueஇல் மாற்றங்களைச் செய்யவிருக்கிறது.

ஆண்கள் பங்கேற்கும் அணிகள் கொண்ட S.Leagueஇல், இளையர்களைச் சேர்த்துக்கொள்ள சிங்கப்பூர் காற்பந்து சங்கம் முடிவெடுத்துள்ளது.

அடுத்த பருவத்தில் இருந்து, லீக்கில் இடம்பெற்றுள்ள 6 உள்ளூர் குழுக்களில் ஒவ்வொன்றிலும், குறைந்தது 6 ஆட்டக்காரர்கள், 23 வயதுக்குக் குறைவானவர்களாக இருக்கவேண்டும்.

அந்த இளைய ஆட்டக்காரர்களில், குறைந்தது 3 பேர், ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்தில் இடம்பெறும் 11 ஆட்டக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கவேண்டும்.

இளம் ஆட்டக்காரர்களிடையே காற்பந்தாட்டத்தில் ஈடுபாட்டை அதிகரிக்கவும், விளையாட்டின் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகளிலும் காற்பந்து சங்கம் மாற்றங்களைச் செய்யவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்