'சொற்போர்' விவாதப் போட்டி
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான 'சொற்போர்' விவாதப் போட்டியில் இம்முறை வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது கான்கார்ட் தொடக்கப்பள்ளி.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான 'சொற்போர்' விவாதப் போட்டியில் இம்முறை வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது கான்கார்ட் தொடக்கப்பள்ளி.
ஐந்தாவது முறையாக நடைபெற்ற அதனைத் தமிழர் பேரவை, கல்வி அமைச்சுடனும் மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழியுடனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
கடும் போட்டி. காரசாரமான விவாதம்.
தொடக்கப்பள்ளி மாணவர்களா இவர்கள் என வியக்கவைத்தனர் மாணவச் செல்வங்கள்.
வயதுக்கு அப்பாற்பட்ட தெளிவு, பேச்சாற்றல்.
இவை, அவர்களின் எதிர்காலத்துக்குக் கைகொடுக்கும் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.
சொற்போர் பயணம் தமிழை மட்டுமல்ல பல்வேறு பாடங்களையும் கற்றுக்கொடுத்துள்ளதாகக் கூறுகின்றனர் மாணவர்கள்.
போட்டி என்பதையும் தாண்டி, மாணவர்களுக்கு இது நல்லதொரு கற்றல் பயணமாகவும் அமைந்தது.
போட்டியில் இரண்டாம் பரிசு, மேரிமவுண்ட் கான்வண்ட் பள்ளிக்குச் சென்றது.
ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது சொற்போர்.
இத்தகைய போட்டிகள் இன்னும் அதிகம் நடைபெறவேண்டும் என்பது மாணவர்களின் விருப்பம்.
இம்முறை 'சொற்போர்' போட்டியில் மொத்தம் 18 பள்ளிகள் பங்குபெற்றன.