சோழ பேரரசு பட்டறை
தமிழ்மொழி மாதக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, கலைப்பித்தர்கள் கழகத்தின் சோழ பேரரசு பட்டறை இன்று நடைபெறுகிறது.
சோழ மன்னர்களைப் பற்றி நாம் படங்களில் பார்த்துள்ளோம். கதைகள் பல கேட்டுள்ளோம்.
பழங்காலத்தில் வாழ்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசர்களைப் பற்றி அடுத்தத் தலைமுறையினரிடம் எப்படி கற்பிப்பது?
கலைப்பித்தர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் சோழ பேரரசு பட்டறை இன்று யாங்செங் தொடக்கப்பள்ளியில் நடந்தேறியது.
மாணவர்கள் எளிதான முறையில் சோழ ஆட்சியின் தாக்கத்தைப் பற்றி அறிந்துகொண்டனர்.
தொடக்கப்பள்ளி 3 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக இந்தப் பட்டறை நடத்தப்பட்டது.
சோழ காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட விளையாட்டுகளில் மூழ்கினர் மாணவர்கள்.
மன்னர் ஆட்சியைப் பற்றிய சொற்களைக்கற்று தங்கள் மொழி வளத்தையும் அதிகரித்துக் கொண்டனர்.