"தெனாலி ராமன்" நாடகம்
விகடகவி என அழைக்கப்படும் தெனாலிராமனின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் கதைகளாக வழங்கப்படுகின்றன.
விகடகவி என அழைக்கப்படும் தெனாலிராமனின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் கதைகளாக வழங்கப்படுகின்றன.
அவற்றை மாணவர்களுக்காக நாடக வடிவத்தில் அரங்கேற்றியது அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம்.
அது பற்றி அறிந்து வந்தார் எமது நிருபர் யாஸ்மின் பேகம்.
தமிழ் மொழி விழாவையொட்டி உலு பாண்டான் சமூக மன்றத்தில் இன்று அரங்கேறியது "தெனாலி" நாடகம்.
நகைச்சுவையின் மூலம் மாணவர்களிடையே தமிழ் மீதான ஆர்வத்தை வளர்த்து அவர்களின் ஆற்றலைப் பெருக்க உதவுவது நோக்கம்.
நாடகம் பார்ப்பது சிறாருக்குப் பிடிக்கும்.
ஆனால் அதில் சில கதாபாத்திரங்களாய்த் தோன்றி நடிப்பது அவர்களுக்குச் சவாலான பணி.
என்றாலும், நடிப்பில் ஜொலித்தனர் குழந்தை நட்சத்திரங்கள்.
'தெனாலி' நாடகம் நாளையும் சனிக்கிழமையும் உலு பாண்டான் சமூக மன்றத்தில் இடம்பெறும்.