உள்ளூர்ப் படைப்புகளைச் சரமாகத் தொகுத்த கவிச்சாரல்
தமிழ்மொழி விழாவையொட்டி, பிரபல உள்ளூர்ப் படைப்பாளரான திரு. சே. வெ. சண்முகத்தின் சில படைப்புகளை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளது ஒரு நிகழ்ச்சி.
தமிழ்மொழி விழாவையொட்டி, பிரபல உள்ளூர்ப் படைப்பாளரான திரு. சே. வெ. சண்முகத்தின் சில படைப்புகளை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளது ஒரு நிகழ்ச்சி.
அந்த நாடகத் தொகுப்பிற்குச் சற்று நேரம் சென்று வருவோம்.
கவிச்சாரல் நிகழ்ச்சி...
அவாண்ட் நாடகக் குழு இதனை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.
திரு. உதுமான் கனி, திரு. பி. கிருஷ்ணன், திரு. க. து. மு. இக்பால் ஆகியோரின் படைப்புகள் இதற்கு முன் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டுக் கவிச்சாரல் நிகழ்ச்சியில் மீன் குழம்பு, மாப்பிள்ளை வந்தார், நாலு நம்பர் உள்ளிட்ட திரு. சே. வெ. சண்முகத்தின் 5 நாடகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டன.