Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களைக் கௌரவித்த நிகழ்ச்சி

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரும்பாடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

வாசிப்புநேரம் -

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரும்பாடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ் மொழி விழாவை முன்னிட்டு உமறுப்புலவர் அரங்கம் என்ற நிகழ்ச்சியில் அவை வழங்கப்பட்டன.

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்குப் பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அமைச்சர் எஸ். ஈஸ்வரன். உமறுப்புலவர் பள்ளி உருவாவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் திரு அ நா மெய்தீன். அவருடைய பெயரில் விருதுகளைப் பெற்றனர் திரு பழனியப்பன், புஷ்பலதா நாயுடு, ஹாஜி முஸ்தஃபா.

சிறப்பு உமறுப்புலவர் விருது முன்னையப் பொதுத் தூதரான கேசவபாணிக்கு வழங்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் சிறப்புக் குறுநாடகம் ஒன்றும் மேடையேறியது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்