சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்: தமிழ் மொழிப் பாடத்திட்டங்களில் சேரும் மாணவர்களுக்கு 400,000 வெள்ளி மதிப்பிலான அறக்கட்டளை
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ் மொழி திட்டங்களில் சேரும் தனது மாணவர்களுக்கு 400,000 வெள்ளி மதிப்பிலான அறக்கட்டளையை நிறுவியுள்ளது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ் மொழி திட்டங்களில் சேரும் தனது மாணவர்களுக்கு 400,000 வெள்ளி மதிப்பிலான அறக்கட்டளையை நிறுவியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அந்த அறக்கட்டளை, தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் பயிலும் இளங்கலை மாணவர்களுக்கு மானியங்களை வழங்கும். 8பேருக்கு 1,250 வெள்ளி மதிப்பிலான மானியங்களும் 500 வெள்ளி மதிப்பிலான 12 மானியங்களும் வழங்கப்படும்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கிய ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் R. ராஜாராம் .