Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ் மொழி விழா - கோலாகலத் தொடக்கம்

உலகுக்கு இது ஏப்ரல் மாதம். ஆனால், சிங்கப்பூர்த் தமிழர்களுக்கோ, இது ஏற்றமிகு தமிழ் மாதம். மாதம் முழுவதும் தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெறக் காரணமாகும் தமிழ் மொழிவிழா, இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: உலகுக்கு இது ஏப்ரல் மாதம். ஆனால், சிங்கப்பூர்த் தமிழர்களுக்கோ, இது ஏற்றமிகு தமிழ் மாதம். மாதம் முழுவதும் தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெறக் காரணமாகும் தமிழ் மொழிவிழா, இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழ் மொழி விழா, மீடியாகார்ப் MES அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது.
"தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்" என்பது விழாவின் கருப்பொருள்.

ஒரு மாதம் நீடிக்கவிருக்கும் விழாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வளர்தமிழ் இயக்கம் வழிநடத்த, 45 அமைப்புகளும் 4 உயர்கல்வி நிலையங்களும்^ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.அமைப்புகளும் மாணவர்களும் தந்துள்ள அமோக ஆதரவு, விழாவின் முக்கிய பலம் என்கிறது, வளர்தமிழ் இயக்கம்.சிங்கப்பூர்:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்