கத்தாருக்கும் அண்டை அரபு நாடுகளுக்கும் இடையிலான சமரசப் பேச்சை நடத்த டிரம்ப் தயார்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கத்தாருக்கும் அதன் அண்டை அரபு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியில் சமரசப் பேச்சை முன்நின்று நடத்தத் தயார் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கத்தாருக்கும் அதன் அண்டை அரபு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியில் சமரசப் பேச்சை முன்நின்று நடத்தத் தயார் என்று கூறியுள்ளார்.
அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள குவைத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு திரு. டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், எகிப்து ஆகியவை, ஜூன் மாதம் கத்தாருடனான அரசதந்திர உறவுகளைத் துண்டித்துக்கொண்ட பிறகு தேக்கநிலை ஏற்பட்டுள்ள வேளையில், அமெரிக்க அதிபரின் கருத்து வெளியானது.
கத்தார் பயங்கரவாதத்துக்குத் துணைபோவதாக அவை குறைகூறின.
கத்தார் அதனை மறுத்துவருகிறது.