பாலித் தீவில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பாலித் தீவில் இன்று காலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் பாலித் தீவில் இன்று காலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
லொம்போக் தீவின் பல பகுதிகளிலும் அது உணரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
நிலநடுக்கம், பாலியின் கராங்கசெம்முக்குப் 11 கிலோமீட்டர் கிழக்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில், கடலில் மையங்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
டென்பசார் வரையிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாய்த் தகவல்கள் கூறின.