"நடந்தது என்ன?" புயலைக் கிளப்பும் ஹில்லரி கிளிண்டன்
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஹில்லரி கிளிண்டன், தமது அனுபவங்களைப் பற்றி புத்தகம் ஒன்றில் எழுதுகிறார்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஹில்லரி கிளிண்டன், தமது அனுபவங்களைப் பற்றி புத்தகம் ஒன்றில் எழுதுகிறார்.
"What happened" என்ற தலைப்பைக் கொண்ட அந்தப் புத்தகம், இம்மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
தமது தேர்தல் பிரசாரம் தோல்வியடைந்தததற்குப் பல தவறான முடிவுகளே காரணம் என்பதைத் திருமதி. கிளிண்டன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
தம்முடைய அரசியல் எதிரிகள், கூட்டணிப் பங்காளிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோரையும் திருமதி. கிளிண்டன் புத்தகத்தில் குற்றஞ்ச்சாட்டியிருப்பதாகத் தெரிகிறது.
2016ஆம் ஆண்டில் நடந்த பல சம்பவங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அவர் சொன்னார்.
தேர்தலில் வென்ற திரு. டோனல்ட் டிரம்ப் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பதவியேற்றபோது, அவருக்கு எதிராகப் பேரணிகள் நடத்தப்பட்டது தமக்கு ஆச்சர்யமளித்ததாகக் குறிப்பிட்டுள்ள திருமதி கிளிண்டன், அத்தகைய ஒற்றுமையும் ஆர்வமும் தேர்தல் நேரத்தில் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது புத்தகத்தை விளம்பரப்படுத்த திருமதி கிளிண்டன் 15 நகரங்களுக்குப் பயணங்களை மேற்கொள்கிறார்.