இந்தியாவில் பாலியல் தாக்குதலுக்குப் பலியான சிறுவன் - பெற்றோர் கொந்தளிப்பு
பள்ளிக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சி செய்தோரை நூற்றுக்கணக்கான கலகக் காவல்துறையினர் தடுத்தனர்.
இந்தியா - புதுடில்லிக்கு அருகே உள்ள அனைத்துலகப் பள்ளி ஒன்றில் 7 வயது சிறுவன் மாண்டுகிடக்கக் காணப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பெற்றோர் காவல்துறை அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
சிறுவனுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படும் பள்ளி பேருந்து ஊழியர் அவனைக் கொன்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
பிரத்யூமன் தாக்கூர் என்ற சிறுவனின் கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
பள்ளிக் கழிவறையில் அவனது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சந்தேக நபர் விசாரணையின்போது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.
சிறுவன் தம்மை எதிர்த்து முரண்டுபிடித்ததைத் தொடர்ந்து குற்றத்தை மறைக்கக் கொலைசெய்ததாக அந்நபர் கூறியிருக்கிறார்.
சம்பவத்தின் தொடர்பில் பள்ளி நிர்வாகிகள் கைதுசெய்யப்பட வேண்டும் எனச் சுமார் 1,000 மாணவர்களின் பெற்றோற்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சி செய்தோரை நூற்றுக்கணக்கான கலகக் காவல்துறையினர் தடுத்தனர்.
பள்ளி முதல்வர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் முழுமையாய் ஒத்துழைக்கப்போவதாகவும் பள்ளி உறுதியளித்துள்ளது.
பள்ளியில் பாதுகாப்பு குறித்து விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.