ஜெருசலத்தின் அங்கீகரிப்பை எதிர்த்து ஆசியாவில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம்
ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் எனும் அங்கீகரிப்பை எதிர்த்து இன்று ஆசியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் எனும் அங்கீகரிப்பை எதிர்த்து இன்று ஆசியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றுள் ஜப்பானும் மலேசியாவும் அடங்கும். அந்நாடுகளில் உள்ள தூதரங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவர் என்று அதிகாரிகள் கூறினர்.
கோலாலம்பூரில் உள்ள தனது தூதரகத்தில் சுமார் ஆயிரம் பேர் திரளக்கூடும் என்பதால் அதை நண்பகல் 12 மணிக்கே மூடுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.