ஆப்கானிஸ்தான்: திருமண மண்டபத்திற்கு வெளியில் தற்கொலைத் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் திருமண மண்டபத்திற்கு வெளியில் தற்கொலையாளி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் திருமண மண்டபத்திற்கு வெளியில் தற்கொலையாளி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது.
தாக்குதலில் குறைந்தது 9 பேர் மாண்டனர். மாண்டோரில் காவல் துறை அதிகாரிகளும் அடங்குவர்.
திருமண மண்டபத்தில் இருந்த அரசியல்வாதிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சம்பவத்திற்கு யார் அல்லது எந்த அமைப்பு காரணம் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
தலிபான் கிளர்ச்சித் தரப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்க மறுத்துள்ளது.