நெதர்லந்து விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த முயன்ற ஆடவர்மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு
நெதர்லந்தின் ஷிபோல் விமான நிலையத்தில் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்ற ஆடவர் மீது, அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நெதர்லந்தின் ஷிபோல் விமான நிலையத்தில் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்ற ஆடவர் மீது, அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தலைநகர் அம்ஸ்ர்டாமில் நடந்த அந்தச் சம்பவத்தில் மற்றவர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அந்தச் சம்பவம், பயங்கரவாதத் தாக்குதலாக வகைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.