Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நற்செயல் புரிந்த வீட்டு வசதி இல்லாதவருக்கு நிதி திரட்டும் மக்கள்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திறந்திருந்த காரைப் பாதுகாத்த வீடற்றவருக்கு 11,000 டாலருக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
நற்செயல் புரிந்த வீட்டு வசதி இல்லாதவருக்கு நிதி திரட்டும் மக்கள்

(படம்: GoFundMe)

ஸ்காட்லந்து: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திறந்திருந்த காரைப் பாதுகாத்த வீடற்றவருக்கு 11,000 டாலருக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் மெக்காவன் (James McGeown), கார் ஒன்றில் சன்னல் திறந்திருப்பதைப் பார்த்தார்.

அதில் பணமும் கைப்பையும் இருப்பதை அவர் கண்டார்.

நெடுநேரம் காருக்கு அருகில் நின்ற மெக்காவன், பணத்தையும் கைப்பையையும் வெளியில் எடுத்து, அதை வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றில் ஒப்படைத்தார்.

பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட கார் ஓட்டுநருக்குப் பெரும் மகிழ்ச்சி.

மெக்காவன் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதைக் கார் ஓட்டுநர் அறிந்தார்.

அதில் இருந்து மெக்காவன் விடுபட உதவும் சிகிச்சைக்கு நிதி வழங்க அவர் முடிவெடுத்தார்.

திரட்டப்பட்ட நிதியின் ஒரு பங்கை அந்தச் சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதாய் கார் ஓட்டுநர் கூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்