இத்தாலி: அரசாங்க நிதி முறைகேடு தொடர்பில் 68 பேர் தடுத்துவைப்பு
இத்தாலியக் காவல்துறையினர், அரசாங்க நிதியில் நடந்த முறைகேட்டின் தொடர்பில் 68 பேரைத் தடுத்துவைத்துள்ளனர்.
இத்தாலியக் காவல்துறையினர், அரசாங்க நிதியில் நடந்த முறைகேட்டின் தொடர்பில் 68 பேரைத் தடுத்துவைத்துள்ளனர்.
நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள அகதிகள், குடியேறிகள் நிலையத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதியில் மோசடி செய்ததாக அவர்கள் குறைகூறப்பட்டனர்.
அந்த நிலையத்துக்குப் பொருள் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்கியதாக அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது.
தடுத்துவைக்கப்பட்டவர்களில், உள்ளூர் மத போதகரும், அந்த நிலையத்துக்குப் பொறுப்பேற்றுள்ள கத்தோலிக்க அறக்கட்டளையின் தலைவரும் அடங்குவர்.