கொலம்பியாவில் அடைமழையில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் மரணம்
கொலம்பியாவில் பெய்து வரும் அடைமழையில் சிக்கி 400க்கும் அதிகமானோர் மாண்டனர்.
கொலம்பியாவில் பெய்து வரும் அடைமழையில் சிக்கி 400க்கும் அதிகமானோர் மாண்டனர்.
அடுத்த மாத இறுதி வரை மோசமான வானிலை தொடரக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் பிப்ரவரியிலிருந்து விடாமல் கொட்டித் தீர்க்கிறது வானம்.
கனத்த மழை, பலத்த காற்று, வெள்ளம் இவை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையை மதிப்பிடுவதற்காக அதிபர் ஜூவன் மேனுவல் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.