வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அவரசரமாகத் தரையிறங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானம் பாரிஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானம் பாரிஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் சேவையைத் தொடங்கியது. விமானத்தில் 130 பயணிகள் இருந்தனர்.
விமானம் வெடிக்கப் போவதாகக் கூறியதாய் சந்தேகிக்கப்படும் சுமார் 50 வயது நிரம்பிய மாது தடுத்து வைக்கப்பட்டார்.
மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கண்டறியப்பட்ட பிறகு அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.