கனடா காட்டுத் தீ: கிட்டத்தட்ட 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
கனடாவில் காட்டுத் தீ மூண்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மாண்ட்ரியல்: கனடாவில் காட்டுத் தீ மூண்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான தீயணைப்பாளர்கள் நூற்றுக்கணக்கான விமானங்களின் துணையுடன், கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர்.
இதுவரை, 39,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வரலாற்றில் மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றும் ஆகப் பெரிய அவசரகால நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.