Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மும்பையில் கடும் மழையினால் பெரும் பாதிப்பு

இந்தியாவின் நிதித்துறை மையமாக விளங்கும் மும்பை, நேற்று மாலை தொடங்கிய கனத்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
மும்பையில் கடும் மழையினால் பெரும் பாதிப்பு

(படம்:AP Photo/Rafiq Maqboo)

மும்பையில், சில வாரங்களில் இரண்டாவது முறையாகக் கடும் மழை பெய்கிறது.

இந்தியாவின் நிதித்துறை மையமாக விளங்கும் மும்பை, நேற்று மாலை தொடங்கிய கனத்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது ஆகச் சுறுசுறுப்பான விமான நிலையத்தின் சேவைகள் பாதிப்புக்குள்ளாயின. பள்ளிகளும் கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நகரின் ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக, பார்க்கக் கூடிய தூரம் குறைந்தது.

பலத்த காற்று, வழுக்கலான ஓடுபாதை காரணமாக, மும்பையில் தரையிறங்கிய உள்நாட்டு விமானம் ஒன்று ஓடுபாதையைத் தாண்டிச் சென்று நின்றது.

மும்பைக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்