Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நேயர்களைப் புண்படுத்திய தொலைக்காட்சி நிலையத் தலைவர் பதவி விலகல்

ஜெர்மானியத் தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி, தமது நேயர்களைப் புண்படுத்தும் சொற்களால் வர்ணித்ததைத் தொடர்ந்து பதவி விலகினார்.

வாசிப்புநேரம் -

பெர்லின்: ஜெர்மானியத் தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி, தமது நேயர்களைப் புண்படுத்தும் சொற்களால் வர்ணித்ததைத் தொடர்ந்து பதவி விலகினார்.

சற்று ஏழையாகவும் பருமனாகவும் உள்ள பலர், வீட்டிலேயே அமர்ந்து கேளிக்கையை எதிர்பார்ப்பதாகவும் அத்தகையோர் தொடர்ந்து முக்கிய நேயர்களாக இருப்பதாகவும் தாமஸ் எபெலிங் கூறினார்.

அந்தக் கருத்திற்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

திரு எபெலிங், நேயர்களைத் தாம் அவமதிக்க முற்படவில்லை என்று விளக்கம் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்