நோபல் பரிசு பெற்ற கவிஞர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம்
நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா (Pablo Neruda), இதுவரை நம்பப்பட்டதுபோலப் புற்றுநோயால் இறக்கவில்லை என்று தடயவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா (Pablo Neruda), இதுவரை நம்பப்பட்டதுபோலப் புற்றுநோயால் இறக்கவில்லை என்று தடயவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
கவிஞருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது மரணம் குறித்த விசாரணையை மேற்கொண்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அவரது உடலில் காணப்பட்ட நச்சுப் பொருளைப் பரிசோதிக்கவிருப்பதாய்க் கூறப்பட்டது.
1973ஆம் ஆண்டு, ஜெனரல் அகஸ்டோ பினோசேட்டின் (Augusto Pinochet) தலைமையில் ராணுவப் புரட்சி நடந்த இரண்டு வாரங்களுக்குள் கவிஞர் பாப்லோ நெருடா மாண்டார்.