கரடி விரட்டியதால் மலையிலிருந்து குதித்த 200 ஆடுகள்
பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் கரடி ஒன்று துரத்தியதால் 200க்கு மேற்பட்ட ஆடுகள் மலையிலிருந்து குதித்து மாண்டன.
பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் கரடி ஒன்று துரத்தியதால் 200க்கு மேற்பட்ட ஆடுகள் மலையிலிருந்து குதித்து மாண்டன.
169 ஆடுகள் ஸ்பெயினின் லடோர்ரே கிராமத்திலும் மற்றவை பிரான்ஸ் எல்லையிலும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆட்டு மந்தையின் உரிமையாளருக்கு பிரெஞ்சு அரசாங்கம் இழப்பீடு கொடுப்பதாக அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கரடிகளை விரட்ட முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர்.