ராணுவத்துக்கான ஏவுகணையை அமைக்கவுள்ள இந்தியா-இஸ்ரேல்
இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து ராணுவத்துக்காக ஏவுகணை ஒன்றை அமைக்கவுள்ளன.
இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து ராணுவத்துக்காக ஏவுகணை ஒன்றை அமைக்கவுள்ளன.
அதற்கான 17-ஆயிரம் கோடித் திட்டத்தை இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லவுள்ளார்.
அதற்கு முன்னதாகப் பிரதமர் மோடியின் தலைமையிலான பாதுகாப்புக் குழு அந்தத் திட்டம் குறித்து கலந்துரையாடியது.
அதனைச் செயல்படுத்த அனுமதியும் அளிக்கப்பட்டது.
தற்காப்புக்கான ஆய்வு, மேம்பாட்டு அமைப்பும், இஸ்ரேலிய விமானத் துறைகளும் இணைந்து திட்டத்தில் பங்கெடுக்கும்.
ஏவுகணைக்கான பாகங்கள் பெரும்பாலும் இந்தியாவில் உற்பத்தியாகும் எனக் கூறப்பட்டது.