சுமார் 2,500 கள்ளக் குடியேறிகளை மீட்டுள்ள இத்தாலி
இத்தாலி, கடந்த மூன்று நாட்களில், படகுகளில் வந்த சுமார் 2,500 கள்ளக் குடியேறிகளை மீட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இத்தாலி, கடந்த மூன்று நாட்களில், படகுகளில் வந்த சுமார் 2,500 கள்ளக் குடியேறிகளை மீட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவிலான கள்ளக் குடியேறிகள் கடல் வழி இத்தாலிக்குள் நுழைய முயற்சி செய்ததாகக் கடற்துறை பாதுகாவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 படகுகளில் இருந்த சுமார் 1,100 பேர் நேற்று லிப்ய கரைக்கு அப்பால் மீட்கப்பட்டனர்.
அவர்கள் வந்த படகுகளின் நிலை மோசமாக இருந்தது என்றும் கூறப்பட்டது.
ஆண்டு தொடக்கத்திலிருந்து பத்தாயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் கடல்-வழி இத்தாலிக்குள் நுழைந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையைவிட அது மும்மடங்கு அதிகம்.