இமயமலையில் 4 மலையேறிகளின் சடலங்கள் கண்டெடுப்பு
இமயமலையில் உள்ள ஒரு முகாமில் நான்கு மலையேறிகள் மாண்டுக்கிடக்கக் காணப்பட்டனர்.
காட்மாண்டு: இமயமலையில் உள்ள ஒரு முகாமில் நான்கு மலையேறிகள் மாண்டுக்கிடக்கக் காணப்பட்டனர்.
அவர்களை நேப்பாளி ஷெர்பாக்கள் கண்டெடுத்தனர்.
கடந்த மாதம் மட்டும் இமயமலை ஏற்றத்தின்போது மாண்டோரின் எண்ணிக்கை 10க்கு அதிகரித்துள்ளது.
8000 அடி உயரத்திலுள்ள Camp Fourஇல், இரண்டு கூடாரங்களுக்குள் 4 மலையேறிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவர்கள் எப்படி மாண்டார்கள் எனத் தெளிவாகத் தெரியவில்லை.
அவர்களுடைய அடையாளமும் உறுதி செய்யப்படவில்லை.