பிரேசில்: சிறையிலிருந்து தப்பிய 100 பேர்
பிரேசிலின் ரியோ கிரான்டே மாநிலத்தில் உள்ள சிறையிலிருந்து சுமார் 100 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
பிரேசிலின் ரியோ கிரான்டே மாநிலத்தில் உள்ள சிறையிலிருந்து சுமார் 100 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறையின் புறச்சுவருக்கு அடியில் தோண்டிய சுரங்கத்தின் வழி அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தப்பியவர்களில் 9 பேரை அதிகாரிகள் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
30 மீட்டர் நீளம் கொண்ட அந்தச் சுரங்கத்தைப் பயன்படுத்தி மொத்தம் 91 கைதிகள் நேற்று (25 மே 2017) தப்பித்ததாக மாநிலத்தின் நீதி, குடியுரிமை அமைச்சர் அறிவித்தார்.
கைதிகள் சிலர் சண்டையிடுவது போல் நடித்து, சிறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தனர். சமயம் பார்த்து மற்றவர்கள் சுரங்கம் வழியாகத் தப்பித்தனர்.
தப்பியோடியவர்களில் 82 பேரை அதிகாரிகள் இன்னும் தேடி வருகின்றனர்.