மென்செஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் மற்றோர் ஆடவர் கைது
பிரிட்டிஷ் காவல்துறையினர், ஆடவர் ஒருவரைக் கைது செய்திருக்கின்றனர்.
பிரிட்டிஷ் காவல்துறையினர், ஆடவர் ஒருவரைக் கைது செய்திருக்கின்றனர்.
திங்கட்கிழமை (22 மே 2017) மென்செஸ்ட்டர் நகரில் நடந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10ஆவது நபர் அவர்.
2 நபர்கள் எந்தக் குற்றச்சாட்டுகளுமின்றி விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, 8 பேர் தற்போது தடுப்புக்காவலில் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மென்செஸ்ட்டர் நகரில் மக்கள் நிரம்பிய இசை நிகழ்ச்சி அரங்கில் தாக்குதல் நடந்தது. பிள்ளைகளையும் இளையர்களையும் குறிவைக்கும் அந்தத் தாக்குதல் அருவருக்கத்தக்கது என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே சாடியுள்ளார்.