மென்செஸ்டர் தாக்குதல் : மேலும் இருவர் கைது
மென்செஸ்டர் 'பாப்' இசை நிகழ்ச்சியொன்றில் அண்மையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காவல்துறையினர் மேலும் 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
மென்செஸ்டர் 'பாப்' இசை நிகழ்ச்சியொன்றில் அண்மையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காவல்துறையினர் மேலும் 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
ஒருவருக்கு வயது 20, மற்றவருக்கு வயது 22.
அவர்களையும் சேர்த்து இதுவரை, அந்தத் தாக்குதலின் தொடர்பில் கைதான சந்தேக நபர்களின் எண்ணிக்கை 11-க்கு உயர்ந்துள்ளது.
தாக்குதலை நடத்திய 22 வயது சல்மான் அபேடியின் தந்தையையும் சகோதரரையும் லிபியக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பிரிட்டனின் பயங்கரவாத விழிப்புநிலை, ஆக உயரிய நிலைக்கு உயர்த்தப்பட்டது.