மென்செஸ்ட்டரில் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள அரியானா கிராண்டே
பிரிட்டனின் மென்செஸ்ட்டரில் r நகரில், புகழ்பெற்ற Pop பாடகர் அரியானா கிராண்டே மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
பிரிட்டனின் மென்செஸ்ட்டரில் r நகரில், புகழ்பெற்ற Pop பாடகர் அரியானா கிராண்டே மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அவருடைய இசை நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக அரியானா கிராண்டே கூறியுள்ளார்.
ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுவதும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதுமே வன்முறைக்குச் சரியான பதிலடி என்றார் அவர்.
இசை நிகழ்ச்சி பற்றி உறுதி செய்யப்பட்டவுடன் கூடுதல் விவரங்களை வெளியிடப் போவதாகவும் அரியானா கிராண்டே தெரிவித்துள்ளார்.