சாம்பாரில் மிதந்து கிடந்த எலி
கர்நாடாகவிலுள்ள பெங்களூர் நகரில் குப்பைகளைப் பெருக்குவோருக்கு நாளெல்லாம் அவதி.
பெங்களூர்: கர்நாடாகவிலுள்ள பெங்களூர் நகரில் குப்பைகளைப் பெருக்குவோருக்கு நாளெல்லாம் அவதி.
பிற்பகல் வேளை உணவுக்காகக் காத்திருந்த அந்த ஊழியர்களுக்கு, சாம்பார் அண்டாவிற்குள் ஓர் அதிர்ச்சி இருந்தது.
இறந்துகாணப்பட்ட சிறிய எலி ஒன்று சாம்பாரில் மிதந்தது.
ஊழியர்களின் மேற்பார்வையாளர், நகர அதிகாரிகளிடம் நடந்ததைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அந்த மேற்பார்வையாளர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தாமே நகர மேயரைக் காணச் சென்றதாகவும், சாம்பாரில் விழுந்தது 'சிறிய எலிதான்' என்றும் மேற்பார்வையாளர் கூறினார்.
சமைத்துக் கொண்டிருந்தபோது எலி விழுந்திருக்காது.
அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றும்போது விழுந்திருக்கலாம். அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று நகர மேயர் தெரிவித்தார்.