சமயத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டுகோள்
எகிப்தின், கைரோவில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு போப் ஃபிரான்சிஸ் சென்றுள்ளார்.
எகிப்தின், கைரோவில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு போப் ஃபிரான்சிஸ் சென்றுள்ளார்.
அந்தத் தேவாலயத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் சுமார் 30 பேர் மாண்டனர்.
முஸ்லிம்-கிருஸ்துவ மாநாடு ஒன்றில் 80 வயது போப் ஃபிரான்சிஸ் பேசினார்.
சமயத்தைக் காரணம் காட்டி நடக்கும் தாக்குதல்களுக்கு அனைத்துச் சமயத் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தை வசப்படுத்துவதற்காக உத்திகளைக் கையாள்வதும் தவறு என்று போப் ஃபிரான்சிஸ் கூறினார்.