தைவான்: தங்கையின் தலையைத் துண்டித்த அண்ணன்
தைவானில், அக்கம்பக்கத்தார் முன்னிலையில் தங்கையின் தலையைத் துண்டித்த 54 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தைவானில், அக்கம்பக்கத்தார் முன்னிலையில் தங்கையின் தலையைத் துண்டித்த 54 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தென்புற காவ்சியுங் நகரில் அந்தச் சம்பவம் நடந்தது.
லின் என்னும் அந்த ஆடவரும், அவரது 52 வயதுத் தங்கையும் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தனர்.
மனநலம் குன்றிய தன் தங்கையைப் பல்லாண்டு காலமாக அவர் பராமரித்து வந்துள்ளார்.
இன்று காலையில், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டித் தங்கையை அழைத்தபோது அதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறினர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சமையல் கத்தியை எடுத்துவந்த அண்ணன் தங்கையின் தலையைத் துண்டித்தார்.
அதற்குமுன் தங்கை, அண்ணனின் காலில் விழுந்து தம்மை விட்டுவிடுமாறு கதறியதாகவும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
அண்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அண்மையில், மூன்று வயதுச் சிறுமியின் தலையைத் துண்டித்த ஓர் ஆடவர் மனநலமற்றவர் என்று கூறித் தைவானிய மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
அது, தைவானில் பலத்த சர்ச்சையை உருவாக்கியது.
குழந்தைகளைக் கொல்வோருக்கு, மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று பலரும் வற்புறுத்தி வருகின்றனர்.